அசுரஹத்தி தோஷம் நீங்க, ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தாள் பார்வதி. தவத்திற்கு இடையூறு ஏற்படாதிருக்க ஒரு விநாயகரையும் பிரதிஷ்டை செய்தாள் பார்வதி அன்னை. மகிஷவதம் முடித்து ரத்தம் தோய்ந்த சூலத்தை அலம்பிய இடம் பாப விமோசன தீர்த்தம் கோவிலின் வடக்கு பகுதியில் உள்ளது.
துர்க்கையின் பாதங்களில் வைத்து மந்திரித்த எலுமிச்சம்பழம், அட்சதை, விபூதி பெற்றுக் கொண்டால் நற்பலன்கள் பெருகுகின்றன.
தேவி தவம் புரிந்த இடம் என்பதால் தபோவனம் எனப் பெயருற்றது. அம்மன் குடி கொண்டு அருளிய ஸ்தலம் என்பதால் அம்மன்குடி என்றானது.
ராஜராஜ சோழனின் மந்திரியான கிருஷ்ண ராம பிரம்மராயர் கட்டிய கோவில்.
தஞ்சை பெரிய கோவில் பணி தடையின்றி நடைபெறவும், ராஜராஜரின் நீண்ட ஆயுளுக்காகவும், அமண்குடி துர்க்கை கோவிலில் சண்டி ஹோமமும், காயத்ரி ஹோமமும் நடைபெற்றது. பிரம்மராயர் முன் நின்று நடத்தினார்.