தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். கிடைத்த அமிர்தத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் இரு சாராருக்குள் சச்சரவு ஏற்பட்டது. அப்போது திருமால் மோகினிப் பெண்ணாக அவர்கள் முன் தோன்றியதில், மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் வாளாவிருக்க, அமிர்தத்தைத் தேவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார் திருமால் எனப் புராண வரலாறு.
மோகினி வடிவில் அமிர்தம் வழங்கிய ஸ்தலம் திருமோகூர் என ஸ்தல வரலாறு. இதனால் மோகன க்ஷேத்ரம் என்ற பெயரைக் கொண்டது ஊர்.
முகம்மது அலி - ஹீரான் மதுரைக்கு படையெடுத்தபோது, திருமோகூர் ஆலயத்துள் புகுந்து பொன், பொருள் மற்றும் விக்ரகங்களைக் கொள்ளை அடித்தனர். கோவில் கதையைத் தீக்கிரையாக்கினர். கொள்ளையடித்த பொருட்களுடன் நத்தம் கணவாய் வழியே போய்க் கொண்டிருந்தபோது, கள்ளர்கள் அவர்களை வழிமறித்து, கொள்ளையடித்த பொருட்களை மீட்டனர் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
மோகூரில் பழையன் என்பவனின் கோட்டை ஒன்று காவல் அரணாய் விளங்கிற்று எனக் கூறுவர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.