உலகநாத பாண்டியன் புத்திரபாக்கியம் வேண்டி இவ்விறைவனை வழிபட்டான். உலகம்மையே மகளாகப் பிறந்தாள். குழல்வாய் மொழியம்மை என்ற பெயருடன் வளர்ந்தாள். ஐப்பசி உத்திர நன்நாளில் இறைவனை மணந்தாள்.
பின்னர் குலசேகர பாண்டியன், விந்தன், பராக்கிரம பாண்டியன் ஆகியோர் வழிவழியாக ஆண்டனர்.
பராக்கிரம பாண்டியனும் அவனது மனைவியும் காசிக்கு செல்ல திட்டமிட்டனர். அசந்தர்ப்பத்தால் மதுரையிலேயே சில நாட்கள் தங்க நேரிட்டது. அரசனது கனவில் தோன்றிய இறைவன் தான் மிக அருகாமையில் இருப்பதாகத் தெரிவித்தார். கண் விழித்துப் பார்த்த அரசன், கனவில் தெரிந்தபடி எறும்பு செல்லும் சாரையைப் பின் தொடர்ந்து சென்றான். ஆற்றின் கரையில் நந்தியையும், மடுவில் சிவலிங்கத்தையும் கண்டான். பின்னர் அவற்றை ஸ்தாபித்து கோவில் ஒன்றை நிர்மாணித்தான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தென்காசி கண்டான் பராக்கிரம பாண்டியன் என்ற பெயரைக் கொண்டான். சித்ரா நதிக்கரையில் செண்பக வனத்தில் இக்கோவிலை நிர்மாணித்தான்.