சுசீரன், சுகன்மன், சுபக்தி எனும் மூவரும் சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு பூஜித்து வந்தனர். இதனால் மகிழ்ந்த சிவபெருமான், அவர்களை துவாரபாலகர்களாக இருக்க வரம் அளித்தார். இதனால் இவருக்கு திரிபுராந்தகேசர் எனப் பெயர் வந்தது. பிரம்மா மற்றும் சரஸ்வதி இருவரும் இவ்விறைவனை வழிபட்டனர். ஏடு (பனைஓலை) தந்தனர். இதனால் ஏட்டீஸ்வரர் எனப் பெயர் வந்ததாக அர்ச்சகர் கூறினார்.
அருள்மிகு ஏட்டீஸ்வரர் திருக்கோயில், அயனம்பாக்கம்
Primary Deity
ஏட்டீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் ஏட்டீஸ்வரர். கம்பீரமான தோற்றம், அழகிய திருமேனி கொண்டவர். இவருக்கு திரிபுராந்தகேசர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் கற்பகாம்பாள் தனி சந்நிதி கொண்டுள்ளார். சிறப்பு மூர்த்தியாக இத்தலத்தில் மாப்பிள்ளை விநாயகர் எழுந்தருளியுள்ளார். மிகுந்த வரப்பிரசாதி. சர்வாலங்காரங்களுடன் காட்சி தரும் அழகான திருவுருவம். இவரை வழிபடுவோர்களின் திருமணத் தடையை விலக்கி, நற்பலன்கள் தருவதாக ஐதீகம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.