திருமலைராயன் ஆற்றில் மிதந்து வந்த ஒரு பெட்டிக்குள், தனித்தனி உறுப்புகளாக இருந்ததை பொருத்திப் பார்த்ததில் கிடைத்த அழகிய சிலை. பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடியில் குறிப்பிட்டிருந்தபடி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பெட்டியைத் திறந்து, அதிலுள்ள உறுப்புகளை ஒன்று சேர்த்து, விழா எடுத்து, மக்கள் தரிசிக்க அலங்கரித்து வைப்பார்கள். அந்த ஓலைச்சுவடியில் பூஜா முறைகள் யாவும் வரையறுத்துக் குறிப்பிடப்பட்டிருந்தனவாம்.
கருவறையிலிருந்து அம்மனின் திருமார்பு வரை நைவேத்ய பொருட்களை மலை போல் குவித்து வைத்து பூஜை செய்வார்கள். தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெறும். மூன்றாம் நாள் காளியம்மன் மீண்டும் பெட்டிக்குள் போய்விடுவாள்.
1997, 2002, 2007, 2012 ஆகிய வருடங்களில் தரிசனம் தந்துள்ள காளியம்மன் இனி 2017-ல் தரிசனம் தருவாள்.