அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில் (திருநறையூர்)

Primary Deity
-
Temple Type
மாரியம்மன் கோயில்
Location
Contact Number
+91-Not Available

ஸ்தல வரலாறு

ஊர் ஊராகச் சென்று திருவிழாக்களில் வளையல்களை விற்கும் வியாபாரிகளில் ஒருவன் சமயபுரத்திற்கு வந்தபோது, இரவுப் பொழுதை ஒரு மண்டபத்தில் கழித்தான். வியாபாரியின் கனவில் வந்த பெண் ஒருவள் தனக்கு வளையல் வேண்டுமெனக் கேட்டாள். அவளுக்கு எத்தனை வளையல்கள் அணிவித்தாலும் உடைந்தே போவதைக் கண்ட வியாபாரி, தன்னுடைய ஊரான திருநறையூருக்கு வந்தால் வளையல்கள் தருவதாகக் கூறுகிறான். விழித்தெழுந்ததும் கனவில் வந்தவள் மாரியம்மன் என உணர்கிறான்.

வளையல்களைப் பெறுவதற்காக வருடா வருடம் அன்னை இங்கு எழுந்தருளுவதாக ஐதீகம்.

பிரதான கருவறையில் திருவிளக்கினையே பிரதான தெய்வமாக, தேவியின் வடிவமாகக் கருதி பூஜித்து வழிபடுகின்றனர்.

ஆகாச மாரியம்மன் என்று அழைக்கின்றனர்.

வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை, சமயபுரத்திலிருந்து ஆகாய மார்க்கமாக இங்கு வந்து 10 நாட்கள் தங்கிச் செல்கிறாள் அன்னை. அதனால் ஆகாச மாரியம்மன் எனப் பெயர் வந்தது.

தீர்த்தக்குடத்தில் எலுமிச்சம்பழம் வைத்து, தர்ப்பைகள் செருகி, வெள்ளியிலான அன்னையின் முகத்தைப் பதித்து, செம்பட்டு ஆடை சாத்தி, அன்னை அமர்ந்த கோலத்தில் இருப்பதாக அலங்காரம் செய்து பல்லக்கில் எடுத்து வருவர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...