ஸ்தல வரலாறு
ஊர் ஊராகச் சென்று திருவிழாக்களில் வளையல்களை விற்கும் வியாபாரிகளில் ஒருவன் சமயபுரத்திற்கு வந்தபோது, இரவுப் பொழுதை ஒரு மண்டபத்தில் கழித்தான். வியாபாரியின் கனவில் வந்த பெண் ஒருவள் தனக்கு வளையல் வேண்டுமெனக் கேட்டாள். அவளுக்கு எத்தனை வளையல்கள் அணிவித்தாலும் உடைந்தே போவதைக் கண்ட வியாபாரி, தன்னுடைய ஊரான திருநறையூருக்கு வந்தால் வளையல்கள் தருவதாகக் கூறுகிறான். விழித்தெழுந்ததும் கனவில் வந்தவள் மாரியம்மன் என உணர்கிறான்.
வளையல்களைப் பெறுவதற்காக வருடா வருடம் அன்னை இங்கு எழுந்தருளுவதாக ஐதீகம்.