பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற தேவர்கள், அதை ஒரு குடத்தில் நிரப்பிக்கொண்டு செல்லும் வழியில், ்
ஒரு குளக்கரையில் குடத்தை வைத்து விட்டு நீராட சென்றனர். நீராடி முடித்து பின்னர் அதை எடுக்க முற்பட்டபோது, ்
குடம் பு+மியில் பதிந்து விட்டது. குடத்துக்குள்ளிருந்த அமுதம் லிங்கமாக உருப்பெற்று, பு+மியில் ஸ்தாபனமாகிவிட்டது. ்
அமுதத்திலிருந்து தோன்றிய ஈஸ்வரன் அமிர்தகடேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
கடம் வைத்த இடமாதலால் கடவு+ர் எனப் பெயர் கொண்டது. ஊழிக் காலத்தை கடந்து நிற்பதாலும், கால பயத்தை ்
கடக்க உதவுவதாலும் கடவு+ர் எனப் பெயர் பெற்றதாக கூறுவர். யம வாதனையை கடத்தற்குரிய ஊர் என்பதாலும் ்
கடவு+ர் எனப்படுவதாக கூறுவர்.
கௌசிக முனிவரின் புதல்வனான ம்ருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்துவதியும், புத்ரபாக்யம் வேண்டி ்
தவமிருந்தனர். ப்ரம்மனின் கணக்குப்படி16 வயது வரை மட்டுமே வாழக்கூடிய புத்திரனைப் பெற்றனர். மார்க்கண்டேயன் ்
எனப் பெயர் சூட்டினர். குழந்தை வளர்ந்து சிவபெருமானின் பக்தனாக இருந்தான். 16 வயது பு+ர்த்தியாகும் தருணத்தில் ்
அவன் உயிரைக் கவர யமன் வந்தான்.
ஸ்ரீ சந்திரசேகராஷ்டகம் பாடிக் கொண்டே சிவபு+ஜையில் யமன் பாசத்தை வீசினான்.
மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிக் கொண்டான். சிவலிங்கத்துடன் சேர்த்து மார்க்கண்டேயனை இழுத்தது யமனின் ்
பாசக் கயிறு . லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் யமனை காலால்் உதைத்து தள்ளி சூலத்தால் அழுத்தி நின்றார்.
இவரே கால சம்ஹார மூர்த்தி .
காலத்தை கணக்கிட்டு உயிர்களை எடுத்துச் செல்லும் பதவியில் நியமிக்கப்பட்டிருந்ததால் யமனுக்கு காலன் என்றொரு ்
பெயர். விநாடிக்கு விநாடி இறந்து கொண்டிருப்பது காலம். அந்த காலத்தையும் காலனையும் சம்ஹாரம் செய்ததால் ்
இவரை கால சம்ஹார மூர்த்தி எனப் போற்றுகின்றனர்.
கால சம்ஹார திருவிழா - 18 நாட்கள் சித்திரை (ஏப்ரல் - மே) மாசத்தில் நடைபெறும். இத்திருவிழாவின் 6ம் நாள் அன்று
கால சம்ஹார தாண்டவமும், யமனை அழிப்பதும், பின்னர் அருள் புரிவதும் ஐதீகக் காட்சிகளாக நடத்திக் காட்டுவர். ்
அன்றைய தினம் கால சம்ஹாரர், பஞ்ச மூர்த்திகள், மார்க்கண்டேயர் ஆகியோரின் உலாத் திருமேனிகள் உலா வரும்
காட்சியைக் காண அனைவரும் திரண்டு வருவர்.
சிவ பு+ஜையிலிருந்தவன் மீது பாசக்கயிறு வீசியது தவறு என்பதை உணர்த்தி, கடமையை செய்ய யமன் வந்ததால் அவனை ்
மன்னித்து உயிர்பிச்சை கொடுத்தார். மார்க்கண்டேயனுக்கு சாகாவரமாக என்றும் 16 எனும் வரம் அளித்தார். பின்னர் ்
லிங்கத்திற்குள் மறைந்தார் என ஸ்தல வரலாறு.
ஞான உபதேசம் பெற விரும்பிய ப்ரம்மனிடம், ஒரு வில்வ விதையைத் தந்து இதை நட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எங்கு ்
முளைக்கிறதோ - அங்கு வந்து வழிபட்டு ஞான உபதேசம் பெறுவாயாக என சிவபெருமான் கூறி விடுகின்றார். ்
அவ்வண்ணமே இத்தலத்தில் நடைபெற்றதால், ப்ரம்மன் இத்தலத்தில் ஞான உபதேசம் பெற்றார் என வரலாறு. ்
அவ்விறைவனே ஆதிமூர்த்தியான வில்வவனேஸ்வரர்.
தஞ்சையை ஆண்ட அரசர் ஒருவரிடம் அபிராமி பட்டரை, ஊர் மக்கள் அறிமுகம் செய்து வைத்தனர். (இயற்பெயர் ்
சுப்ரமண்யர் - சரபோஜி மன்னரே அவருக்கு அபிராமி பட்டர் எனும் பெயர் சூட்டியதாக குறிப்பொன்று கூறுகின்றது). ்
அன்று அமாவாசை எத்தனை நாழிகையுள்ளது? என அரசர் கேட்கஅபிராமி பட்டரோ அன்று பௌர்ணமி என்று ்
கூறி விடுகின்றார். ்
தன் பிழையை உணர்ந்த அபிராமி பட்டர் அம்பாள் சந்நிதி சென்று தமது வாக்கை மெய்ப்பிக்கும்படி வேண்டுகிறார். ்
கீழே தீ மூட்டி அதன் மீது உறியைத் தொங்க விட்டு அதன் மேல் அபிராமி பட்டரை ஏற்றுகிறான் அரசன். தீயின் ்
மீதிருந்தபடியே அந்தாதி பாடுகிறார் பட்டர். தன் பக்தனை காப்பாற்ற தனது காதுகளின் தாடங்கத்தை (தோடுகளை) ்
கழற்றி வீசுகிறாள் அபிராமி. பு+ரண சந்திரன் தோன்றி அமாவாசை தினம் பௌர்ணமியானது.
தை மாச அமாவாசையன்று - அபிராமி தன் காது தோட்டை ஆகாயத்தில் விட்டெறிந்து  ்பு+ரண சந்திரனை வரவழைத்த ்
காட்சியையும், பட்டர் அந்தாதி பாடும் காட்சியையும் ஐதீகமாக நடத்திக் காட்டுகின்றனர்.
குங்கிலியக் கலய நாயனார் மற்றும் காரி நாயனார் தோன்றிய ஸ்தலம்.
இது ஒரு நித்ய அனுக்ரஹ ஸ்தலமாக கருதப்படுகின்றது.
சக்தி பீடங்களுள் ஒன்று - கால பீடம்  ்-  ்தேவாரத் திருத்தலம் - அஷ்ட  ்வீரட்டானங்களுள் ஒன்று ்
விநாயகரின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது .