அருள்மிகு அபிமுகேச்வரர் திருக்கோவில் (கும்பகோணம்)

Primary Deity
அபிமுகேச்வரர்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available

ஊழி வெள்ளத்தில் மிதந்து வந்த அமிர்த கும்பத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தேங்காய் விழுந்து, லிங்கமாக தோன்றிய இடம் இது. நாளிகேர லிங்கம் என்றும் பலேசர் என்றும் திருநாமங்கள் உண்டு.

நவநதிகளும் நவகன்னிகைகளாக மகாமகக் குளத்திற்கு நீராட வந்தபோது, கிழக்கு முகமாக இருந்த லிங்கம் அவர்களுக்கு அருள் புரிவதற்காக, மேற்கு முகமாக திரும்பிக்கொண்டது.

'அபிமுக' எனும் சொல்லுக்கு 'எதிர் நோக்கி இருத்தல்' எனப் பொருள். தங்களுக்காக லிங்கம் திரும்பிக்கொண்டதால், அந்தப் பெயரிலேயே எழுந்தருளி தரிசனம் தருமாறு நவகன்னிகைகள் வேண்டினர் என்பது ஸ்தல வரலாறு.

மூலவர்: அபிமுகேச்வரர், அம்பாள்: அமுதவல்லி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அபிமுகேச்வரர். ஒளி வீசும் அழகிய சிவலிங்க மூர்த்தம். அம்பாள் அமுதவல்லி வரப்பிரசாதியாக எழுந்தருளி தரிசனம் தருகிறாள்.

இவ்வாலயத்தில் யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். சனி மற்றும் இதர கிரக தோஷங்கள் நீக்குபவராக எழுந்தருளியுள்ளார். வீரபத்ரர் உக்ரமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மிக உயரமான பைரவரை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...