அக்னி பகவான் புறா வடிவம் கொண்டு சிபி சக்ரவர்த்தியை சோதித்ததினால் ஏற்பட்ட பாபம் நீங்கவும், சிவபெருமானை அழையாது தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டதினால், வீரபத்ரரால் பெற்ற தண்டனையினால் ஏற்பட்ட சோர்விலிருந்து மீளவும், இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை அமைத்து பூஜித்து வழிபட்டார். இதனால் இவ்வூர் அக்னீஸ்வரம் என்றும் இறைவன் அக்னீஸ்வரர் என்றும் பெயர் பெற்றனர்.
காத்யாயினியாக இருந்த அம்பிகை, சிவபெருமானை மணக்க வேண்டி தவமிருந்த ஸ்தலம். அந்த எண்ணம் திருவீழிமழலையில் நிறைவேறுகிறது. திருமணத் தடை நீக்கும் ஸ்தலமாகவும், ரத்த அழுத்தம், உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியன போக்கும் ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.
தேவார திருத்தலம் - பாஸ்கர சக்தி ஸ்தலம்